ராவணன் மைதிலி 27
ராவணன் 27 மிக எளிமையாக வீட்டிலே ஆதிலா வளைகாப்பு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். உச்சக்கட்ட பாதுகாப்போடு அங்கு கூடி இருந்தனர். நலங்கு வைத்து வலயல்கள் போடும் போது மின்னும் ஆதிலா முகத்தை பார்த்து நெஞ்சம் நிறைந்தாள் ஜனனி. அவளுக்குள் ஏக்கங்கள் நிறைய இருக்கிறது. இருந்தாலும் தனக்கு கிடைக்காதது அடுத்தவர்களுக்கு கிடைக்க கூடாது என்று நினைக்க மாட்டாள். ஏக்கமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைவாள். என்ன செய்வது உள்ளங்கையில் தெரிந்த குழந்தைகளின் அசைவை மறக்க முடியவில்லையே. அவளை கவனித்த வீர் அருகில் வந்து இடையோடு வலைக்க அவன் தோளில் சாய்ந்தாள். "உனக்கு ஒன்னும் இல்லையே?" என்றவனை நிமிர்ந்து பார்த்து சிறு புன்னகையுடன் கண்கள் சிமிட்டினாள். அவனுக்குள் ஏதோ உணரப்பட ஜெஸ்வந்த்க்கு கண் காட்டினான். அடுத்து அடுத்து அணைவர் ஒரு மாதிரி பார்க்க வெண்ணிற புகை மண்டலம் அங்கு உருவானது. தன் கணவனை கொன்றவனை பழி தீர்க்க அனைவரையும் இன்று கொன்று குவிக்கும் வெறியோடு வந்தாள் ரிதன்யா. இருபதுக்கும் மேற்பட்ட ஆட்களோடு வெறி பிடித்தவள் போல வந்தாள். வ...

